Thursday, July 29, 2010

ஒத்துக்குறேன் நீ திறமைசாலி தான்

இந்திய நாட்டில், இருசக்கர வாகனம் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய  நிறுவனத்தின் முதலாளி திரு.ராஜசேகர்.

வழக்கம் போல் தனது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தவர்,வழியில் தனது நிறுவனத்தை சேர்ந்த ஒரு இருசக்கர வாகனத்தின் விளம்பர பலகையை பார்த்தார்.

பார்த்ததும்,அவர் முகத்தில்  மகிழ்ச்சி பரவியது. மக்களை கவரும் வகையில் அந்த விளம்பர பலகை அமைந்ததே அதற்கான காரணம்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அலுவலகம் செல்லும்பொழுது,அந்த இடத்தில் அதே வாகனத்திற்கு வேறு ஒரு வித்யாசமான விளம்பர பலகையை கண்டார்.

அது அவர் முன்பு கண்டதைவிட மிகவும் பிரமாதமாக அமைந்திருந்தது. அவர் முகத்தில் வழக்கத்தை மீறிய ஒரு சந்தோசம்.

மீண்டும் 3 நாட்கள் கழித்து அவ்வழியில் சென்றபொழுது அதே வாகனத்திற்கான வேறு ஒரு விளம்பர பலகையை கண்டார்.

அதை கண்டவர், ஒரே வாரத்தில் மூன்று வித்தாயசமான வகையில் விளம்பர பலகையை தயாரித்த ஊழியர்களுக்கு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள எண்ணினார்.

அன்று அலுவலகத்தில், தனது விளம்பர குழுவின் ஊழியர்களை அவரது அறைக்கு அழைத்தார்.

ஏன் எதற்கு என்று புரியாமல் அனைவரும் குழப்பத்தில் நிற்க,  
யார் இந்த விளம்பர பலகைக்கான வித விதமான ஐடியா கொடுத்தது. எதனை பேரு இந்த விளம்பர பலகைக்கான வேளையில் இருந்தீர்கள் 
என்று ராஜசேகர் கேட்டார்.

குழப்பத்தில் இருந்தவர்களுக்கு மேலும் குழப்பமே உண்டானது.

"அய்யா எந்த விளம்பர பலகை பத்தி கேட்குறீங்க" என்று மேனேஜர் கேட்க, "மவுண்ட் ரோடு ல இருக்கே அத தான் சொன்னேன்" என்றார் ராஜசேகர்.

அப்படி எதுவும் பலகை நாம அங்க வைகலையே என்றார் மேனேஜர்.

சிரித்துகொண்டே  ராஜசேகர்,

"யோவ் உன்ன போய் என் மேனேஜரா வச்சி இருக்கேன் பாரு, தினமும் அந்த வழியா வரேன், எனக்கு தெரியாதா"  என்றார் அவர்.

"ஐயோ சார் உண்மையா சொல்றேன்,நம்ம ஆளுங்க வைக்கல அந்த பலகையை" என்று கூறியதும் ராஜசேகர் குழப்பத்தின் உச்சிக்கு சென்றார்.

சரி அப்படி என்றால் அத அந்த எடத்துல வச்சது யார்னு எனக்கு கண்டுபிடிச்சி சொல்லுங்க என்றார்.

எப்படியோ கண்டு பிடிச்சி ரவி என்ற ஒருவன் தான் இந்த வேலைய பண்ணி இருக்கான் சார் என்று மேனேஜர் ராஜசேகரிடம் கூறினார்.

உடனே அவர், நான் அவனை பார்க்கணும், அவன கொஞ்சம் வர சொல்லுங்க ஆபீஸ்கு என்றார்.

அன்று மாலை 4 மணிக்கு ரவி அவர் அறைக்கு வந்தான்..

வா உட்கார் என்றார் ராஜசேகர்.

அவரது அழைப்பு வரும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தது போல மிடுக்குடன் இருந்தான் ரவி.

நீ யார் ? என் கம்பெனி தயாரித்த வாகனத்திற்கு நீ ஏன் விளம்பர பலகை தயாரித்து நகரத்தின் முக்கியமான எடத்துல வைக்கணும் ? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு தயாராக பதில் வைத்திருந்த ரவி, 

சார் ஒரு மாதத்திற்கு முன்பு உங்க கம்பெனில விளம்பர குழுவிக்கு (advertisement team) ஆள் வேணும்னு சொல்லி இருந்தாங்க.
 
MBA முடிச்ச  நானும் அதற்காக அப்லை பண்ணினேன்.
 
ஆனால் முன் அனுபவம் இல்லாத ஒரே காரணத்தினால எனக்கு வேளை  இல்லன்னு சொல்லி அனுபிட்டாங்க.
 
முன் அனுபவம் மட்டும்தான் முக்கியம் என்றில்லை... திறமையும்,உழைப்பும் கூட முக்கியம் தான்..
 
என்னோட திறமையை நிருபிக்க தான் இந்த முயற்சியில் இறங்கினேன் என்று அவன் சொல்ல,நாளை முதல் காலை 10 மணிக்கு மறக்காம ஆபீஸ்க்கு வந்துடனும் என்று கூறி அனுப்பினார் ராஜசேகர் ..      
 

6 comments:

Unknown said...

super...

Unknown said...

இன்னும் நல்லா முயற்சி பண்ணுங்க. குமுதம் ஒரு பக்க கதை சாயல்ல வேண்டாமே 

இரகுராமன் said...

நன்றி கலாநேசன் அவர்களே :)

நன்றி முகிலன்.. என்னுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் வேறுபட்டு இருக்க வேண்டும் என்ற எண்ணமுண்டு ...
நீங்க கூறியதை போல வித்யாசம் காட்ட முயற்சிக்கிறேன் ..

ஜானகிராமன் said...

நல்ல கதைங்க ரகு. இரசித்தேன். அதே போல, அந்த வித்தியாசமான விளம்பர ஐடியாவை உங்கள் கதையிலும் விவரித்திருந்தால் ரொம்ப சூப்பரா இருந்திருக்கும். கதையை படிக்கும்போது, அப்படி என்ன வித்தியாசமான ஐடியா என்ற புதிர் ஏற்படுகிறது.

இரகுராமன் said...

oru silathu post panrathukku munnaadi thonrathu illa..

yetho onnu nenaichi appadiye eluthi post paniduren..

ipo neenga sollum pothu thaan "ada cha innum konjam virivaa eluthi irukalaame"nu thonuthu..

thavarai thiruthi kolgiren :(

K. ASOKAN said...

இப்படித்தான் வித்தியாசமா சிந்திக்கணும்ன்னு சொல்ற கதை என்னுடைய http://kavithaigal0510.blogspot.com தளத்திற்கு வருக.வருக. வருக...