Saturday, July 31, 2010

தலைக்கு மேல் கத்தி


லட்டுக்கு பிரியப்பட்டு, உலகில் சுயநலவாதிகள் இரண்டாவதாக அதிகம் வரும் இடம் அது.
அங்கே ஒரு முக்கியமான பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.. தலைமை பொறுப்பில் இருக்கும் அந்த நபர் பேசி கொண்டிருந்தார்..
அங்கே மயான அமைதி நிலவியது..
 

"தினமும் நம்மை நம்பி,பல பேரு பல எடத்துல இருந்து வராங்க. நாமும் அவங்களுக்காக நம்ப நேரத்த முழுசா செலவழைக்கிறோம்.
இதுல நமக்கு கிடைப்பது ரொம்ப சொற்பமான தொகை தான்.மத்தவங்க சுய
த்துகாக நாம் கஷ்ட படுகிறோம்,இன்று முதல் நம்ப சுயத்தோட இருந்தா தான் நம்ப புள்ள குட்டிங்க நல்லா இருக்கும்.

கைல கத்தி எடுக்கணும்னா இனி நம்ப கேட்கறத அவங்க கொடுத்தே ஆகணும்.
எவ்ளோ பெரிய மயிரா இருந்தாலும் நம்ப கத்திக்கு பதில் சொல்லி தான் ஆகணும் ..
அரசாங்க தரப்பில் நிச்சயம் எதிர்ப்பு எழும்,அதுக்கு நாம அவங்க கழுத்துல வைக்கும் கத்தி தான் பதில் சொல்லணும்.
நம் கொள்கையில் இருந்து நாம் பின் வாங்கவே கூடாது..
நமக்காக,நம்ப குடும்பத்துக்காக, நாம தான் போராடனும்..
இதையெல்லாம் மீறி எனக்கு தெரியாம யாரவது ஆயுதத்த கைல எடுத்தீங்க, அவங்களுக்கு நானே மொட்ட போட வேண்டியது வரும்.. புரியுதா ?? "

என்று கூறி அவர் உரையை முடிச்சதும் பலமான கரகோஷம் எழுந்தது ...

2 comments:

ஜானகிராமன் said...

அப்படி போடு அரிவாளை...

Unknown said...

super..