Thursday, October 14, 2010

விக்ரமுக்கு ஒரு சவால் (சவால் சிறுகதை)

கல்லூரி முடிந்ததும் வேகமாக வீட்டுக்கு வந்தவன் லுங்கி ஒன்றை கட்டிக்கொண்டு கடையை நோக்கி நடந்தான்.அன்று அவன் தந்தை ஏதோ சற்று களைப்புடன் காணப்படவே,"அப்பா நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்" என்றான் விக்ரம்.

மாலை நேரம் என்பதால் சுறுசுறுப்பாக இயங்கவேண்டிய கட்டாயம், விக்ரமுக்கு இது  பழகிய ஒன்று தான் ஆகவே திறமையாக வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தான். கடைக்கு வருபவர்கள் 98 சதவிகிதம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களே என்பதால் அவர்களுடன் சிரித்து உரையாடியபடியே வேலைகளை செய்தான்.

இரவு மணி 8 ஆக வாடிக்கையாளர்களின் வருகை சற்று குறைந்திருந்தது. விக்ரம் அவன் தந்தை அருகே இருந்த ஒரு ஸ்டூலில் அமர்ந்துக்கொண்டு  ஒரு வார இதழை புரட்டி கொண்டிருந்தான்.சினிமா பற்றிய செய்திகளை தேடி தேடி படித்துக்கொண்டிருந்தவன் ஒரு பக்கத்தில் சிறுகதை போட்டிக்கான விளம்பரத்தை கண்டான்.அதை மீண்டும் ஒரு முறை முழுவதாக படித்தவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

“என்னடா தனியா சிரிசிகிட்டு இருக்க??“என்று அவன் தந்தை கேட்க,


"ஒன்னுமில்லப்பா,ஒரு சிறுகதை போட்டிக்கான விளம்பரத்த பார்த்தேன் அதுல தங்கச்சி  காமினியோட பெயர் கூட ஒரு கேரக்டரா இருந்துச்சி அதான் சிரிச்சேன்"என்றான்.

"அட சிறுகதை போட்டியா!! எங்க அந்த விளம்பரத்தை வாசி கேட்போம்".

விக்ரம் விளம்பரத்தை வாசிக்க தொடங்கினான்,

"தமிழ்க்களஞ்சியம் குழுவினர் நடத்தும் சிறுகதை போட்டி.


போட்டிக்கான விதிமுறைகள் பின் வருமாறு

கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்:

1)
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “
ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலைஎன்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “
காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியேஎன்று பாராட்டினார் பரந்தாமன்.

இந்த மூன்று வாக்கியங்களும் கொடுத்திருக்கும் வரிசைப்படியே வருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதி நவம்பர் 1 க்கு முன் அனுப்பிவைக்கவும்.

கதையை எழுதி அனுப்பவேண்டிய முகவரி,
தபால் பெட்டி என் 4,
தமிழ்க்களஞ்சியம் குழு,
வளசரவாக்கம்,
சென்னை.

இதனை கேட்டுக்கொண்டிருந்த விக்ரமின் தந்தை, "நீ ஏண்டா ஒன்னு எழுதி அனுப்ப கூடாது??" என்றார்.

என்னது நானா!! இதுவரைக்கும் நான் எந்த ஒரு கதையும் எழுதியதே கிடையாதே!! இந்த போட்டிக்கு வேற பல பேர் எழுதுவாங்க இதெல்லாம் எனக்கு சரிபட்டு வராதுப்பா.

"டேய் B.A தமிழ் படிக்குற,போட்டியில கலந்து தான் பாரேன்.முயற்சி செய்தா தானே முடிவு எப்படி இருக்குன்னு தெரியவரும்".

அதெல்லாம் சரி,ஆனா இதை எப்படி ஆரம்பிக்க நான் ?

"ஹ்ம்ம்,அவங்க தந்துள்ள வாகியங்கள வச்சி பாக்கும் போது, எழுதுறவங்க ஒரு த்ரில்லர் அல்லது ஆக்ஷன் கதைய தான் எழுதுவாங்கன்னு தோணுது. அதுல இருந்து விலகி,நீ கொஞ்சம் வித்யாசமான கோணத்துல யோசிச்சி  பார்டா.மூளைக்கு கொஞ்சமாவது வேலைய கொடு".

"மூளையா??அப்படி ஒன்னு நிஜமாவே என்கிட்ட இருக்கா !!!" என்று தன்னையே கேட்டுக்கொண்டான். 

சரி பரிசு என்ன சொல்லியிருக்காங்க??

முதல் பரிசா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புஸ்தகம் தராங்க. இரண்டாவது  பரிசா ஐநூறு ரூபாய் மதிப்புள்ள புஸ்தகம் தராங்க.

"அட அருமை போ.யோசிச்சி ஒரு நல்ல கதையை எழுதி என்கிட்ட காட்டு. இதை உனக்கு ஒரு சவாலா எடுத்து செய்வியாடா??"என்று அவர் கேட்க, எங்கோ கண்களை அலைய விட்டுக்கொண்டிருந்த விக்ரம் தலையை மட்டும் ஆட்டினான்.

அப்பொழுது கடையிலிருந்த கலைஞரின் இலவச தொலைக்காட்சி பெட்டியில் "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்" பாடல் ஒலிக்க, பக்கத்து வீட்டு ஜானகி கடையை ஓரக்கண்களால் பார்த்தபடியே கடந்தாள்.

4 comments:

கருடன் said...

ஹா..ஹா..ஹா.. சார் நீங்க பெரிய கே.டி சார்... இப்படி எல்லாம் கதை எழுதறிங்க.... வழ்த்துகள்....

இரகுராமன் said...

@ TERROR-PANDIYAN(VAS)-ஆஹ் ஹா .. இந்த விஷயம் உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா :)

Madhavan Srinivasagopalan said...

ரொம்ப சிம்ப்பிளா ரம்பிச்சிருக்கீங்க.. அப்புறம்.. எதோ கதைன்னு சொன்னீங்களே.. அது எங்க ?

வெற்றிபெற வாழ்த்துக்கள்..

(மனதினுள் : கெளம்பிட்டாங்கையா .. கெளம்பிட்டாங்க... நம்மள விட நல்லா எழுதுறாங்களே.. நம்ம கதைக்கு பரிசு கேடைச்சாமாதிரிதான்.. வெளங்கிடும்..)

இரகுராமன் said...

//எதோ கதைன்னு சொன்னீங்களே.. அது எங்க ? //

அவ்வவ் இப்படி கேட்டுடீங்க.. :) :)