Tuesday, May 4, 2010

தாயின் அரவணைபிற்கு ஏங்கி....

நூறு குடும்பங்கள் வாழும் அந்த முகாமில் முக்கியமானவர் அந்தோணி தான்.
நன்கு படித்தவர்,செல்வசெழிப்புடன் வாழ்ந்தவர், ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியை உள்நாட்டு போரில் இழந்தவர். இப்பொழுது மகள் வடிவுடன் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளார்.
தாய்நாடு என்று எண்ணி வந்தோமே, ஆனால் இங்கேயும் அடிமைபோல் வாழ வேண்டியதா இருக்கே என்று எண்ணி அவர்கள் நொந்து போகாத நாள் இல்லை..  


அன்று காலை தூங்கி எழுந்ததும் ஆறு வயதான வேலு அந்தோணியை தேடி ஓடி வந்தான் ... 

டேய் டேய் !! ஏண்டா தம்பி இப்படி ஓடி வர,எங்கையாவது கீழ விழுந்துடபோர என்றார் அந்தோணி.
தான் மலம் கழிக்க வேண்டும் என்றான் அந்த பெரியவரிடம்.
ஹா ஹா.. இதுக்கு தான் நீ அவ்ளோ வேகமா ஓடி வந்தியா !! சரி வா என்று அவனை அழைத்து சென்றார்.
மலம் கழித்த சிறுவனை சுத்தப்படுத்த நீர் இல்லை.அவரும் ஒரு சில இடத்திருக்கு சென்று நீர் தேடினார் கிடைக்கவில்லை.
வேறு வழியின்றி அங்கே லட்டியுடன் அமர்ந்திருந்த அந்த காவல் துறை அதிகாரியிடம் சென்றார்..
ஐயா,குழந்தை மலம் கழிச்சான். இப்போ தண்ணீர் இல்லாததால சுத்தம் செய்ய முடியாம தவிக்கிறேன் என்றார்..
அதுக்காக,அவன கழுவ என்னை போய் தண்ணி கொண்டு வர சொல்றியா என்றார் அந்த காவலாளி கோவமாக.
ஐயா நான் அப்படி சொல்ல வரல, இரண்டு நாளா தண்ணியே சுத்தமா இல்ல, சமைக்க கூட தண்ணி இல்லை. நீங்க இத மேல் அதிகாரிங்க கிட்ட சொன்னீங்கனா எங்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும் என்றார் பெரியவர்.
உங்களுக்கு எல்லாம் போனா போகுதுன்னு தங்கறதுக்கு எடம் கொடுத்தா,இது வேணும் அது வேணும்னு சட்டம் பேசுரீகளோ அகதி நாயுங்களா என்று ஆவேசப்பட்டார் அந்த காவலாளி.
பதில் பேசாமல்,வேறு வழியின்றி அமைதியாக குடிசையை நோக்கி திரும்பி சென்றவர்,சிறு சிறு கந்தல் துணியை கொண்டு வேலுவை சுத்தம் செய்தார்.
 

அப்பொழுது வேலுவின் 2 வயது தம்பி குமார் அழுவும் சப்தம் அந்தோணியின் காதில் விழ,ஏய் வடிவு கொழந்த பசியில அழுவுது பாரு. யாருக்கு பால் சொரக்குதோ அவங்கள சீக்கிரம் கொடுக்க சொல்லு என்றார்.
முகாமைவிட்டு வெளியே சென்று கூலி வேலை செய்ய முப்பது நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. 

அவர்கள் வேளைக்கு சென்று கொண்டு வரும் தொகையின் ஒரு பகுதியை அரசு அதிகாரிகளுக்கு தரபடும்,மீதமுள்ள பகுதியில் முகாமில் இருக்கும் அனைவர்க்கும் உண்பதற்காக பன் மற்றும் பிஸ்கேட் என்று எதாவது வாங்கி வருவார்கள்.
இந்த பொருட்களே இவர்களின் வாழ்கையை ஓட்ட உதவுகின்றன. இவையின்றி எப்பொழுதாவது அரசியல்வாதிகள் தங்களின் விளம்பரத்திற்காக 5 கிலோ அரிசி அது இது என்று எதாவது தருவது உண்டு, ஆனால் அதையும் பிடிங்கி தின்னும் கூட்டம் இருப்பது தான் கொடுமை..
அன்றைய தினம் அந்தோணியிடம் அதிகாரிகள் ...  

நாளை உங்களை காண அமைச்சர் திரு. ஜெயகாந்தன் காலை 10 மணிக்கு வருகிறார், உங்கள் மக்கள் அனைவரையும் எங்கும் செல்லாமல் இங்கேயே இருக்குமாறு சொல்லிவிடு என்றார்.

அப்படியே நாளை அவரது வரவை எண்ணி அன்றைய பொழுதை கழித்தார்கள்.
அடுத்த நாள் சரியாக சொன்னதுபோல் 10 மணிக்கு நேரம் தவறாமல் வந்தார் ஜெயகாந்தன். மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் அவரை காண, அவர் எதோ அதிகாரிகளுடன் பேசி கொண்டிருந்தார்..


வேலு அந்த கூட்டத்தில் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தான்,அதிகாரிகளுடன் பேச்சை முடித்துக்கொண்டு அவர் அருகில் நின்ற வேலுவை அவரது கைகளால் தூக்கினார்.

உன் பேரு என்ன என்றார் ஆசையாக.. வேலு என்றான் அவன் .
உனக்கு இங்கே இருக்க பிடிச்சி இருக்கா என்றார். சற்றும் யோசிக்காமல் பிடிக்கலை என்றான்.
ஏன் என்று அவர் கேட்கும் முண்பதே காரணத்தை சொல்ல தொடங்கினான் வேலு.
"என் அம்மா, என்னை தனியாக தவிக்கவிட்டு எங்கோ சென்றுவிட்டால்.அப்படி அவள் சென்றது தவறு தானே ?? " என்றான் ஜெயகாந்தனிடம்..
சற்று மௌனம்காத்த ஜெயகாந்தன்,
"தவறு தான், உங்களது அல்லல்களையும், இன்னல்களையும் பார்த்துக்கொண்டு தாய்நாடு அமைதிகாத்தது மிக பெரிய தவறு தான். தவிக்கும் குழந்தையான உங்கள்
அனைவருக்கும் கைகொடுக்காத இந்த தாய் நாட்டிற்கு பாவ மன்னிப்பே கிடையாது" என்றார்
கூட்டத்தில் இருந்து ஒருவன் நீங்க நல்ல நடிகர்னு சொன்னாங்க இப்போ தான் நேருல பாக்குறோம் என்று சொன்னான்......

3 comments:

Unknown said...

ஜெயகாந்தன் என்ற பெயரில் எந்த அரசியல்வாதியை வேண்டுமானாலும் பொறுத்தி வைத்துப் பார்க்கலாம். ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற பேதமில்லை.

இரகுராமன் said...

யாரோ ஒருவரை மட்டும் தாக்கும் உள்நோக்கம் கொண்டு இதை எழுதவில்லை. தமிழகத்தில் உள்ள அணைத்து அரசியல் தலைவர்களும் இப்படி தான் இருக்கிறார்கள்.இது அனைவருக்குமே பொருந்தும்

தினேஷ் ராம் said...

அருமை. உண்மை.. உண்மை.

ஆனால் மாற்றம்.. ஏற்ப்டாதது!!