Friday, April 30, 2010

வெள்ளை மனசு

 மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த விக்னேஷ், தான் கொண்டுவந்த  இரு சக்கர வாகனத்தை கூட மறந்து, நடந்தே வீட்டை சென்றடைந்தான் ..

வழியில் யாரையும் நிமிர்ந்து பார்க்கவுமில்லை,பேசவுமில்லை..
வீட்டினுள் நுழைந்தவன் நேராக சென்று ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.. ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

அம்மாவின் அருகில் சென்றான்,
"
எனக்கு கேன்சர் இருக்குன்னு டாக்டர் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து சொன்னாரு. அதுவும் இப்போ குணப்படுதுற நிலையில இல்லை. முத்திபோயிடுசாம்.. இன்னும் அதிகபட்சம் 3
மாசம் "
 என்றான்...

இதை கேட்டதுதான், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார் அவன் தாய் ..
உடனே பதறிபோனவன், தண்ணீர் தெளித்து தாயை தெளிய வைத்தான்..
எழுந்தவர் அழ தொடங்கிவிட்டார்,

"உன்ன நல்லா தான டா வளத்தேன். ஏன் டா ஆண்டவன் இப்படி சோதிக்குறான்"..
 

அலுவலுகத்தில் இருந்த தந்தையை அழைத்து, அவருக்கும் தகவல் அளித்தான் விக்னேஷ் ...

அவருக்கோ இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் இப்படி வளர விட்டோமே என்று வருத்தம்..
 

ஆனால் இப்பொழுது எதுவும் அவர்கள் கையில் இல்லை என்பதை புரிந்து கொண்டார்...

இருந்தாலும் ஏன் இன்னொரு நல்ல மருத்துவமனையில் காட்ட கூடாது என்று எண்ணினார்.. அழைத்தும் சென்றார் விக்னேஷை,ஆனால் பலனில்லை...

வீட்டில் அமைதியே நிலவியது... நண்பர்களிடமும் பேச விருப்பமில்லாமல் வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்தான் விக்னேஷ்..

இப்படியே இரண்டு வாரங்கள் அமைதியும் அழுகையுமாக கழிந்தது..

ஒருநாள்  விக்னேஷை அழைத்தார் அவன் தாய்..

"இந்த வயசுல இப்படி நீ எந்த சுகத்தையும் அனுபவிக்காம போறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா, அதனால நான்  ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்" என்றார் அவர்.

என்ன அது என்று புரியாமல் விக்னேஷ் மட்டுமல்ல அவன் தந்தையும் குழம்பிபோய் இருந்தார்..

அப்பொழுது அவன் தாய்,
" உனக்கு வேண்டிய துணி எல்லாம் எடுத்து வைக்குறேன், நீ மும்பைக்கு போய்  கொஞ்ச நாள் இருந்துட்டு வா" என்றார்.

அதை கேட்டதும் கொஞ்சம் அதிர்ச்சியில் மூழ்கி போன விக்னேஷின் தந்தை தன் மனைவியின் என்னத்தை புரிந்து கொண்டு  தன்னை சமாதான படுத்திக்கொண்டார்....


விக்னேஷிற்குஎன்ன சொல்வதென்று  புரியவில்லை.. அமைதியாகவே நின்றுகொண்டிருந்தான்...

நான் போய்  நாளைக்கு நீ மும்பை போறதுக்கு டிக்கெட் புக் பண்றேன் என்று கூறி விட்டு சென்றார் விக்னேஷின் தந்தை ..

விக்னேஷின் அருகில் சென்ற அவன் தாய்,
 இது எனக்கு தப்புன்னு தோனல டா. யோசிக்காத போய் கொஞ்ச நாள் எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா இருந்துட்டு வா என்றார்.

மறுநாள் மும்பை செல்ல ரயில் நிலையத்தில் விக்னேஷ் காத்துக்கொண்டிருக்க, அவன் தந்தை அவன் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து,
"எது எப்படியானாலும் சேப்டி (safety)  முக்கியம் மறந்துடாத"  என்று கூறி வழி அனுப்பிவைத்தார்...

மறுபடியும் வருவானா என்று கூட முழுமையாக தெரியாது,ஆனால் அவன் சந்தோஷத்திற்குகாக அனுப்பி வைத்தார்கள் ...

No comments: