Saturday, July 31, 2010

புகைச்சல்

டேய் பிடி டா... 
 
மாட்டேன் என்ன கட்டாயபடுத்தாதீங்க ..

டேய் சொன்னா கேளுடா..  எனக்காக ப்ளீஸ்..

நீங்களே இப்படி சொன்னா நான் என்ன செய்ய ??   

டேய் இப்படி சிகரெட் பிடிக்க மாட்டேன்னு சொன்னா எப்படி?? நீ என் பையன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்குடா..

காலையில இருந்து போன் மேல போன்..நான் பையன் கிட்ட பேசி சமாதான படுத்துறேன்னு சொல்லி இருக்கேன் அவங்ககிட்ட..

உன்ன நாலு பேரு பாராட்டனும்னு எண்ணம் இருந்தா சிகரெட் பிடிச்சி தான் ஆகணும்.. அதான் டா பந்தா..

தண்ணி  கூட வேணாம்னு விட்டுடலாம்,ஆனா தம் விஷயத்துல முடியாது டா...

நீ ஸ்டைலா தம் அடிச்சி நடி
க்கனும், உனக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகணும்.. வாழ்க்கைல என்ன மாதிரி பெரிய எடத்துக்கு போகணும் ..

இது தான் எனக்கு சந்தோசம்..   

2 comments:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தம், தண்ணி காட்சில நடிக்காத எம்ஜிஆர் உங்களை மன்னிக்கட்டும்.

இரகுராமன் said...

அப்போ அவர் தந்தை,அவரை கட்டாயபடுத்தவில்லை போலும் .. :)

நல்ல விஷயம் தான் ...