Wednesday, November 2, 2011

மாத்தேரான் - மாசற்ற சொர்கத்திற்கு ஒரு பயணம்


பூனாவில் படிப்பை முடித்த ஒரு வருடத்திற்கு பின், நண்பர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடலாம் என்று எண்ணினோம்.. அதற்கான பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்..

நானும் ஆர்வத்துடன் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நண்பரையும்  இ -மெயில் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்புக்கொண்டேன்.. 

அனைவரும் பூனாவில் செப்டெம்பர் மாதம் சந்திப்பதாகவும் அங்கிருந்து 'மாத்தேரான்' என்னும் இடத்திற்கு செல்வதாகவும் முடிவு செய்தோம். 

பூனாவில் பனி புரியும் அண்ணன் ஆனந்த அவர்கள், மாத்தேரான் செல்லும் பயணத்திற்கான ஏற்பாட்டினை செய்யத்தொடங்கினார்.. 

10-செப்டெம்பர்-2010 அன்று நான் சென்னையிலிருந்து புறப்பட்டு  பூனாவை அடைந்தேன்.. ஆங்காங்கே இருந்து நண்பர்கள் பூனா வந்தடைந்தனர்.. 

நெப்போலியனின் துணையுடன் ஓல்ட் மாங்கய் தேடி மாத்தேரானுக்கு 11-செப்-2010  பயணத்தை தொடங்கினோம்...மாத்தேரானில் சரக்கு விலை அதிகமென்பதால் போகுற வழியிலேயே வேண்டியதை வாங்கிக்கொண்டோம்..


'மாத்தேரான்' - 'Forest on the Head'...பூனாவிலிருந்து 120 கி மீ தொலைவில் இப்படி ஒரு மாசற்ற சொர்க்கம் உள்ளது என்பதை இரண்டு வருடம் அங்கு தங்கி படிக்கும் பொழுது அறியாதிருந்தேன்.. அப்படியொரு அழகு...

மாத்தேரானுக்கான Ghat Road துவங்கும் இடத்தில் சுற்றுலா வாகனத்திலிருந்து இறக்கி விடப்பட்டோம்..7 கி.மீ தொலைவுள்ள Ghat Roadல் சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கபடாததால் மாருதி ஆம்னியில் பயணத்தை துவக்கினோம்..

Dasturi Naka என்னும் இடம் வந்ததும் இதற்க்கு மேல் எந்த வாகனம் செல்லாது...அடுத்த 8 கி.மீ நடந்தோ அல்லது குதிரையிலோ தான் செல்ல வேண்டும் என்றும் கூறினார்கள்..

அட  8 கி.மீ தானே என்று நடக்க தொடங்கினோம் .. உடன் நடந்தவர்கள் எங்களிடமிருந்தும் குரங்குகளிடமிருந்தும் விலகியே இருந்தனர் ..

நடைபாதையின் அருகிலிருந்த ரயில் தண்டவாளங்கள் அங்கே பல வருடங்களுக்கு முன்பு டாய் ட்ரைன்  இயங்கியுள்ளதை எங்களுக்கு தெரியப்படுத்தியது..

UNESCO Oct 2009 ஆம் ஆண்டு மீண்டும் ரயில் போக்குவரத்தை அங்கே தொடங்க ஆய்வு நடத்தியுள்ளது.. அதன் அடிப்படையில் அங்கே மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும் வாய்ப்புள்ளது. 




நாங்கள் நடந்து செல்லும்போதே, இது நம்ம கொடைக்கானல் போலவோ ஊட்டி போலவோ அல்ல என்பதை அறிந்துக்கொண்டோம்..

ஒரு மணி நேர நடை பயணத்திற்கு பின் மாத்தேரானை அடைந்தோம்...


நடந்து வந்த அசதி,நல்ல பசியும் கூட..நாங்கள் தங்குவதற்காக புக் செய்த ஹோட்டலுக்கு சென்றதும் அன்லிமிடெட் லஞ்ச் ப்ரீன்னு சொன்னாங்க...  அப்புறம் நடந்தத சொல்லவா வேணும் .. நாங்க 11 பேர் தான் ஆனா எப்படியும் 200 ரொட்டி காலியாகியிருக்கும்.. இது இல்லாம ப்ரூட் சாலட் வேற.. 

இதெல்லாம் முடிச்சிட்டு கொஞ்ச நேரம் ஓய்வுக்கு பின்னர் பிற இடங்களுக்கு நடக்க தொடங்கினோம்.. 

மாத்தேரானில் சுற்றி பார்பதற்கு நிறைய இடங்கள் இருக்க அனைத்தையும்  2Days/1Night காண முடியாது என்பதை புரிந்துக்கொண்டோம்.. அதுவும் நடந்தே சென்று அத்தனை இடங்களையும் பார்ப்பது கடினமான ஒன்று..

ஆக கீழ் காணும் இந்த மேப்பில் இடது  பக்கத்தினை மட்டும் சுற்றி பார்த்திட முடிவு செய்தோம்..








முதலில் Charlotte Lake சென்றோம். பிறகு Cecil Pt (Actually a water fall mouth) க்கு சென்றோம்.

Charlotte Lake 


Cecil Pt
                                     


அணைத்து இடங்களும் நான் இது வரை கண்டிடாத ஒரு உலகத்தை எனக்கு காட்டியது..


நான் ஐஸ் கிரீம் சாப்பிடுறத பார்த்து யார் கண்ணு வச்சாங்களோ தெரியல .. போன இடத்துல எனக்கு மெட்ராஸ் ஐ வந்துடுச்சி :(( 








நான் இந்த பதிவில் அதிகம் மாத்தேரானின் அழகினை வர்ணிக்கவில்லை.. காரணம் 

1.எனக்கு சரியா வர்ணிக்க தெரியாது/வராது..
2.நான் இலக்கியவாதி அல்ல 
3.டைப் செய்ய கை வலிக்குது .. அதான் போட்டோ போட்டிருக்கேன்ல அத பார்த்து தெரிஞ்சிக்கோங்க :P

மேலும் இந்த இடத்தினை நான் வர்ணிப்பதை விட நீங்களே சென்று கண்டுக்கொள்வது சிறந்தது..

http://en.wikipedia.org/wiki/Matheran - Check this for more details..


No comments: