Tuesday, April 27, 2010

வாழ்க தமிழ்

டேய் மச்சான் அந்த தலப்பா காரனோட வண்டிய உஷார் பண்ணிட்டேன்,வேற எவனாவது கேட்கறதுக்கு முன்னாடி நம்ப நடைய கட்டுவோம்டா என்றான் கோகுல் .
 

ஆமாம் புனே வந்து ரெண்டு மாசம் ஆகுது, இப்போ தான் வண்டி எடுத்துக்கிட்டு ஊர் சுத்த போறோம், வெளிய சொல்லவே அசிங்கமா இருக்குடா....
அதுவும் உன்னோட வரணுமா? எதாவது பிகர் கூட போனா சந்தோசமா இருக்கும் என்று சலித்துகொண்டான் விக்ரம்.
அடங்குடா கொஞ்சம்,பேசியே கொல்லாத நான் Levis 
க்கு போய் ரெண்டு T ஷர்ட் வாங்கணும், அப்படியே ரெண்டு செட் woodlands ஷாக்ஸ் வாங்கணும் என்றான் கோகுல்.

டேய்,வர வர நீ விடுர பீட்டர்க்கு அளவே இல்லாம போச்சிடா.ஷாக்ஸ் கூட woodlands ல தான் வாங்கனுமா? சரி வந்து தொலையரேன்..
வண்டியில் சென்றுகொண்டிருக்கும் போது, ஏன் டா மச்சி இந்த ஊரு பொண்ணுங்க மட்டும் சும்மா கும்முன்னு இருக்கே அதெப்படி ?

யார பார்த்தாலும் உலக அழகி மாதிரியே இருகாங்கடா, உன் கிளாஸ்ல எந்த பொண்ணு கிட்டையாவது என்ன அறிமுகப்படுத்தி வையேன்டா ?? அப்படி மட்டும் உன்னால எனக்கு ஒன்னு செட் ஆச்சி,அடுத்த நாளே உனக்கு ஒரு "Johnny Walker" வாங்கி தரேன் என்றான் விக்ரம் ..
டேய் ஏன் இப்படி 
பின்னாடி உட்கார்ந்துகிட்டு உயிரை வாங்குற, விட்டா என்ன மாமா வேல பாக்க வச்சிடுவ போல என்றான் கோகுல்.
பேசிக்கொண்டே கடைக்கு வந்து சேர்ந்தனர். நகரத்தின் மிகவும் நெரிசல் மட்டும் போக்குவரத்து மிகுந்த சாலை அது. சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் கடைக்குள்ளே சென்றனர்.
T ஷர்ட் வாங்கி விட்டு வெளியே வந்த இவருக்கும் ஒரு அதிரிச்சி காத்திருந்தது..
டேய் மாப்ள இங்க விட்டுட்டு போன வண்டிய காணம்டா என்று அலற ஆரம்பித்தான் கோகுல்.
ஐயோ அந்த தலைப்பா காரன் கிட்ட கெஞ்சி கெஞ்சி வாங்கிட்டு வந்தேனே. இப்போ அவனுக்கு என்ன சொல்லுவேன் என்று கோகுல் ஒரு புறம் புலம்பிக்கொண்டு இருக்க, மறு பக்கம் விக்ரம், "ஐயோ இந்த விஷயம் காலேஜ்ல தெரிஞ்சா ஒரு பொண்ணு கூட என்ன மதிக்க மாட்டாளே" என்று கதரி
க்கொண்டிருந்தான்..
டேய் எரும எதுக்கு பீல் பண்ணிட்டு இருக்கான் பாரு...முதல்ல வண்டிய தேடுவோம் வா என்று வாகனம் நிறுத்திய இடத்தில் நின்றுகொண்டிருந்த இருவரிடம் கேட்டான் கோகுல் . அவர்கள் தெரியாது என்று கூற இன்னொருவரிடம் கேட்டான். வண்டி விட்ட இடம் No Parking என்பதால் போக்குவரத்து துறையினர் கொண்டு சென்று விட்டதாக கூறிய அவர்க்கு நன்றி தெரிவித்துக்கொண்டு போக்குவரத்து காவல் நிலையத்துக்கு சென்றார்கள்.
வண்டிக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தா தான் விடுவோம் என்று அவர்கள் கூற இருவரும் பாக்கெட்டை தடவினார்கள். மச்சான் என் கிட்ட கிரெடிட் கார்டு தான்டா இருக்கு, காசு இல்லடா என்று கோகுல் கூற அட பீட்டர் மவனே பைசா இல்லாம தான் சுத்துரியா ?? என்கிட்ட 200 ரூபாய் தான்டா இருக்கு என்றான் விக்ரம்.
இது போதும் வா என்று காவல்துறை அதிகாரியிடம் சென்று நாங்கள் தென் இந்தியர்கள்,நகரத்தில் முதல் முறையாக வண்டி எடுத்துக்கிட்டு வந்தோம், காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் சார் என்று அவரது பாக்கெட்டில் 200 ரூபாய் சொருகி வைத்து விட்டு கல்லூரிக்கு சென்றார்கள்..

நாட்கள் இப்படியே செல்ல 3 மாதங்கள் கழித்து,

டேய் கோகுல் எனக்கு ATM ல இருந்து காசு கொஞ்சம் எடுக்கணும் அவசரமா. எனக்கு லேப் வேற இருக்கு அதனால என் வண்டி எடுத்துக்கிட்டு நீ போய்ட்டு வரியா என்றான் அந்த ஆந்த்ரா ரெட்டி.
சரி போறேன்டா என்றவனிடம், இந்தா 100 ரூபாய் வண்டிக்கு பெட்ரோல் போடு என்றான் ரெட்டி..
கோகுல் அதை வாங்கி கொண்டு விக்ரமிடம் சென்றான்.. மச்சி சீக்கிரம் வா,ரெண்டு பேரும் சிட்டில FC ரோடு
க்கு போகலாம் என்று கூறினான்.
அது சனியன் புடிச்ச ரோடுடா.அங்க போனாலே இந்த மாமா பசங்க காச புடுங்காம விட மாட்டானுங்க என்றான் விக்ரம்.
டேய் அதெல்லாம் சமாளிச்சிக்கலாம் என்று கோகுல் கூற, சரி நான் தான் வண்டிய ஓட்டிகிட்டு வருவேன் என்றான் விக்ரம்.
வண்டியில் சென்றுகொண்டிருக்க டேய் அந்த மாக்கான் ரெட்டி 100 ரூபாய் பெட்ரோல்க்கு தந்தான்.. அதுல 50 ரூபாய் பெட்ரோல் போட்டுக்கிட்டு மீதிய ஆட்டைய போட்டுக்கலாம் நம்ப என்றான் கோகுல் .

வண்டியயை விக்ரம் ஓட்ட ஜூஸ் கடை ஒன்றை கண்டனர்.டேய் வண்டிய பார்கிங் ஏரியால சரியா நிறுத்துடா என்று கோகுல் கூற,இப்போ பாரு என் திறமையை என்று சொல்லி போக்குவரத்து துறையினர் அமைத்திருந்த பார்கிங் "P" போர்டு பக்கம்சரியாக நிறுத்தினான் விக்ரம்.
இப்போ எவன் வண்டிய தூக்கிட்டு போவான் என்று பாத்துடுறேன்,என்று வீர வசனம் பேசி விட்டு அருகில் இருந்த ஜூஸ் கடையின் பெஞ்சினில் அமர்ந்தார்கள்.. இருவரும் கதை அடித்துக்கொண்டு இருந்தனர்.
பேசிகொண்டே இருக்கும்போது அலறிக்கொண்டே ஓடினான் கோகுல்,இவேன் ஏன் இப்படி ஓடுறான் என்று விக்ரம் திரும்பி பார்க்க அவனுக்கு கோவம் கோவமாக வந்தது.
பார்கிங்கில் இருந்த வாகனத்தை போக்குவரத்து அதிகாரி அவர்கள் வாகனத்திற்குள் ஏற்றி கொண்டு இருந்தார்கள்..
எரிச்சலுடன் நேராக போக்குவரத்துக்கு அதிகாரியிடம் சென்று, ஐயா நான் வாகனத்தை சரியாக "P" போர்டு அருகில் தானே நிறுத்தினேன் என்று கூற,அவர் அளித்த பதிலில் இருவரும் வாயடைத்து நின்றனர்..
அதிகாரி கூறிய பதில் " வண்டி நிறுத்தப்பட்டு இருந்த இடம் பார்கிங் ஏரியா தான்,அனால் இது இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் இல்லை,கார் பார்க் செய்யும் இடம் என்றார்" அவர்.மேலும் அவர் "P" போர்டில் கார் பார்கிங் என்று ஹிந்தியில் எழுதி இருப்பதை சுட்டி காட்டினர்..
வேறு வழியின்றி நாங்கள் தமிழர்கள், எங்களுக்கு ஹிந்தி படிக்க தெரியாது நாங்கள் கல்லூரி மாணவர்கள் என்று கெஞ்ச, கையில் இருந்த 100 ரூபாயை பிடிங்கி கொண்டு வாகனத்தை விட்டனர்..
வாகனம் கிடைத்த மகிழ்ச்சியில் இருவரும் இருக்க,கையில் இரண்டு ஜூஸ் கிளாஸ் வைத்துக்கொண்டு இவர்களை பார்த்துகொண்டிருந்தான் ஜூஸ் கடைக்காரன்.
இவர்கள் இருவரும் செய்கையில் கையில் காசு இல்லை என்று கூற அவனும் செய்கையில் உங்களுக்கு எல்லாம் நல்ல பிகர் செட் ஆகவே ஆகாது என்று தலையில் அடித்துகொண்டான்..
அலைச்சலோட தங்கி இருந்த அறைக்கு சென்ற அவர்கள்,தொலைக்காட்சி பெட்டியில் தமிழ் செய்திகள் கேட்க, அதில் பேசிக்கொண்டிருந்த தமிழகத்தின் மத்திய மந்திரியை கண்டு வெறுத்து போனார்கள்..
தமிழ் தமிழ்னு சொல்லியே நம்ப வாழ்க்கையில் கபடி ஆடிட்டாங்க..

ஆனா இவனுங்க குடும்பத்துல பாரு ஹிந்தி,ஆங்கிலம் இன்னும் எல்லா எழவையும் தெரிஞ்சி வச்சி இருப்பானுங்க. இவனுங்க எல்லாம் உருப்படுவாங்களா......

1 comment:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கருணாநிதிக்கு தந்தி அனுப்புங்க பாஸ். குறைஞ்சது ஐநூறு தந்தியாவது அனுப்பனும்...