Thursday, April 22, 2010

இடியரசன்

இந்தியா,பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தறப்பு ஒருதின கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது.
 

அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி சென்னையில் நடந்துகிட்டு இருக்க,போட்டியை காண லக்க்ஷக்கணக்கில் கூட்டம் கூடி இருக்கு.
விறுவிறுப்பா இந்திய அணி அடித்த 291 ரன்களை பாகிஸ்தான் அணியின் வீரர்கள் துரத்திகொண்டிருந்தார்கள்.
அப்போ பாகிஸ்தான் வீரர் அப்ரிடி (afridi), இந்திய வீரர் எறிந்த பந்தை சிக்ஸ் (6) அடிக்க விண்ணை நோக்கி பந்தை பரக்க விட,காமெராக்கள் அனைத்தும் பந்தை விண்ணில் காட்ட, மக்கள் அனைவரும் பந்து பவுண்டரி தாண்டி விழுமா என்று எதிர்பார்போடு பந்தை பார்த்துகொண்டிருகார்கள்.
ஆனா பந்து பவுண்டரி தாண்டி,கூட்டத்தில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஒரு கையில் கொண்டு மடியில் கை குழந்தையோட அமர்ந்து, மொபைல் போனில் பேசிகொண்டிருக்கும் அந்த பெண்ணை நோக்கி பரந்துகொண்டிருக்கு.
அப்போ தான் சார் நீங்க, அப்படியே பறந்து போய் கொழந்தைய கொள்ள வர அந்த பந்தை ஏர்லையே பிடிச்சி அந்த உசுர காப்பாத்துறீங்க. இங்க தான்
இளையதளபதி இன் (in) "இடியரசன்" அப்படின்னு படத்தோட டைட்டில் போடுறோம் சார்.
 

எதிரி நாட்டு கொழந்தையோட உயிரை கூட மதிச்சி ரிஸ்க் எடுத்து காப்பாத்தின உங்கள எல்லாரும் தோளுல தூக்கிட்டு ஆடுறாங்க.. இங்க உங்க அறிமுக பாட்டு (introduction song) வைக்கிறோம் சார்..
 
"எமனுக்கு எமன் டா, கொழந்தையுல்லாம் கொண்டவன்டா இடியோடு மோதினா, நீ அட்ரஸ் இல்லா ஆளுடா..... "
 


அப்படின்னு தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக்ல ஒரு பாட்டு வைக்கிறோம் சார்.
பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கம் உங்களுக்கு பாராட்டு தெரிவிச்சி டெல்லில விருது தராங்க சார். விருது வாங்கிட்டு நீங்க சென்னை விமான நிலையத்துல கால் எடுத்து வைக்கறீங்க,உடனே எல்லாருக்கும் முன்னாடி உங்கள ஒரு பொண்ணு கட்டி புடிச்சி முத்தம் கொடுக்க உங்க ரெண்டு பேருக்கும் காதல் ஸ்டார்ட் ஆகுது சார் என்று இயக்குனர் சொல்லி கொண்டிருக்க,
மீதி கதையை கேட்காமல், நீங்க போய் தயாரிப்பாளர பாருங்க.நான் ஓகே சொன்னேன்னு சொல்லுங்க என்று மகிழ்ச்சியுடன் கூறி அனுப்பினார் நடிகர்.

2 comments:

ஜானகிராமன் said...

இடியரசன். பேரே ரொம்ப டெரரா இருக்கு. கதையை படிச்சதுமே என் தலையிலே இடியே விழுந்தது பாஸ்

இரகுராமன் said...

அப்போ எனக்கு வெற்றி தான் ..