Monday, April 26, 2010

ஏன் இப்படி ?

நான் என்னுடைய பொறியியல் படிப்பை முடித்த பிறகு புனே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் எனது முதுநிலை பட்டப்படிப்பு படிக்கச் சென்றேன்..
 

புதுவகையான மக்கள்,மொழி,கலாசாரம் என்று அனைத்தும் புதுசாக இருக்க,அங்கே சென்ற இரண்டு நாட்களுக்குள் என்னுடன் தமிழகத்தில் இருந்து கல்லூரியில் சேர்ந்த நபர்களுடன் நட்பை வளர்த்துகொண்டேன்.

ஒன்றுகூடிய தமிழ் நண்பர்கள் அனைவரும் அவர்களுடைய பெயர், ஊர் என்று சில விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்க, நண்பர் ஒருவர் தன்னுடைய பெயர் இளவரசன், ஊர் விழுப்புரம் என்றும் கூறினார்..
அதை கேட்ட எனக்கு அளவில்லாத சந்தோஷம்..


இருக்காதா பின்ன!! ஆயிரம் மயில் தாண்டி தமிழ் நாட்டுல இருந்து வந்தாலே மனசுல சந்தோசம் இருக்கும்,அதுவும் தமிழ்நாட்டுல, நம்ப ஊருல இருந்து வந்திருகாங்க அப்படினா எனக்கு எவ்ளோ மழிக்சியா இருந்திருக்கும்??


உடனே விழுப்புரம்ல எங்க,எந்த எடம் என்று ஆர்வத்துல என் வாய் கேள்விகளை அடுக்க..

இளவரசனிடம் இருந்து வளவனூர் என்று பதில் வந்தது.  

அட நம்ப ஊரு.. சரி எங்க படிச்சீங்க ஸ்கூல் எல்லாம் என்று வினா எழுப்ப,நான் ராமகிருஷ்ண வித்யாலயா ல படிச்சேன் என்றார்..

ஐயோ டேய் நானும் அங்க தான் படிச்சேன் ... எந்த வருஷம் நீ 12th முடிச்ச??

நான் 2002 ல முடிச்சேன்.. நீ எப்போ முடிச்ச ?என்று என்னை கேட்டவனிடம் 2003 என்று பதில் சொன்னேன்.

அட பாவி எனக்கு அங்க ஜூனியர் டா நீ ..
என்ன ஸ்கூல் ல பார்த்து இருக்கியா ? என்று என்னை பார்த்து கேட்டவனிடம் இல்லை என்றே உண்மையை கூறினேன்..

 

டேய் எல்லாருக்கும் என்னை தெரியும் டா .. நீ மட்டும் எப்படி டா தெரியலனு 
சொல்ற ?? என்று வருந்தியவன், சரி உனக்கு சதீஷ்,ராஜ்கமல் தெரியுமா என்று என்னிடம் கேட்டான்..
 

அட நம்ப பசங்க..சதீஷ் ,ராஜ்கமல் ரெண்டு பேரும் மாநில அளவில் பள்ளியில் ஓட்ட பந்தையத்தில் சாதனை படைத்தவர்கள்,அவங்கள போய் தெரியாம இருக்க முடியுமா என்றேன் நான் ..

டேய் அவங்க ரெண்டு பேரும் என்னோட கிளாஸ் தான்.. அவங்கள மட்டும் தெரிஞ்சி இருக்கு என்ன தெரியல உனக்கு என்றவனிடம் "நீ என்ன கிழிச்ச உன்ன தெரிஞ்சிக்க" என்றேன்.. 

கோவத்தின் உச்சிக்கு சென்ற அவன் 10th ல பள்ளியிலும், மாவட்ட அளவிலும் முதிலிடம் அது மட்டுமின்றி 12th ல பள்ளியில் முதலிடம்,மாவட்ட அளவிலும் இரண்டாவதாக வந்தேன் என்றான்.


அசடு வழிந்துவிட்டு,
"விளையாடுற வயசுல விளையாடாம ரொம்ப படிச்சா இப்படி தான்".. ஹி ஹி ....
அதனால தான் உன்ன எனக்கு தெரியல என்றேன்..

இப்படி தான் நல்லா படிபவர்கள், சாதனை செய்பவர்கள் மக்கள் மனதில் பதிவதில்லை..
விளையாட்டு,அரசியல்,கலை சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறார்கள்..

இதெற்கெல்லாம் என்ன காரணமாக இருக்க முடியும்??

6 comments:

மதார் said...

Nalla cömedý

மதார் said...

Nalla cömedý, pavam antha junior.

Cable சங்கர் said...

:)

இரகுராமன் said...

ஆஹ். அந்த ஜூனியர், நான் தாங்கோ .. பாவம் அந்த சீனியர் பையன்னு சொல்லுங்க...

Unknown said...

Lots of spelling mistakes boss.

http://raguramrocks.blogspot.com/2010/04/blog-post.html

சிரித்தால் - சிரித்தாள்
என்றால் - என்றாள்

இரகுராமன் said...

ah im sorry.. i ll try to avoid them. Thanks fr intimating