Wednesday, August 11, 2010

தேடி போய் வாங்கி கட்டிக்கிட்டது

எப்பவும் போல அவன் வண்டி ஓட்டுவான்,நம்ப வேடிக்க பார்த்துக்கிட்டே போகலாம்னு நெனைச்சேன்,ஆனா அன்னைக்கு பார்த்து தலவலிக்குது நீயே ஓட்டுடானு சொல்லிட்டான் என் நண்பன்..

சரின்னு நானும் வண்டிய ஆபீஸ்கு (office) விட்டேன்...பின்னாடி மேல சாஞ்சிக்கிட்டே தூங்கிகிட்டு வந்தான் என் நண்பன்.
 
அப்பொழுது ஒரு சிக்னலில் பச்சை விளக்கு மின்னுவதர்காக காத்துக்கொன்டிருந்தேன்...

அங்கே எதிரே நின்றுக்கொண்டிருந்த போக்குவரத்துதுறை காவல் அதிகாரி கையில் ஒரு கேமரா வைத்திருந்தார்.. 

திடிரென்று என்னை பார்த்ததும் என்னை படம்பிடிக்க தயாரானார்..
அட காலையில
கலக்கலா ஆபீஸ்கு போறோமே அத தான் அவரு போட்டோ எடுக்க போறாருன்னு நானும் என்னோட வலதுகையை உயர்த்தி உற்சாகமாக ஆட்டினேன்..
அதை பார்த்துவிட்டு என்னை நோக்கி வேகமாக நடந்து வந்தவர்,

" டேய் எதுக்கு டா இப்போ கையை உயர்த்தி ஆட்டின ?" என்றார்...
எனக்கு ஒன்னும் புரியல இருந்தாலும் அவரிடம்,



"நீங்க என்ன தான் போட்டோ எடுகரீங்கனு நெனைச்சி ஆட்டினேன்" என்றேன்..
அதற்கு அவர், "ஆமாம் உன்ன தான் எடுத்தேன் ஆனா ஏன் எடுத்தேன்னு தெரியுமா??" என்றார்..
அப்போ தான் புரிஞ்சிது...



"போக்குவரத்து விதியை மீறி சிக்னலில் எல்லை கோட்டை தாண்டி நிற்பதால் போட்டோ எடுத்து ஆதாரத்தோடு நம்மை அழைத்து அபராதத்தை பிடுங்குவார்கள் என்று" ... 

பிறகு என்ன வழக்கம் போல்,


"நீதிமன்றத்திற்கு போனால் 1000 அபராதம் கட்டனும் இல்லைனா எனக்கு ஒரு 300 ருபாய் கொடு என்று ஆரம்பித்தார்"...
ஐயோ சும்மா இருந்தா கூட விட்டிருப்பான்,கையை தூக்கி ஆட்டி நானே வம்புல சிக்கிட்டேன்னு எரிச்சலோட ஆபீஸ் போய் சேர்ந்தேன்.....

1 comment:

vels-erode said...

இப்பிடியெல்லாம் கூடவா நடக்குது?

இதுக்குத்தான் வண்டி ஓட்டும்போது
டக்கரா ட்ரெஸ் பண்ணக் கூடாதுண்றது...!